மொழிக்காலனித்துவமும் பரதநாட்டியமும்
|
'ஆடலின் ஆற்றுகைப் பரிமாணங்கள் உன்னத வளர்ச்சியடைந்த அளவுக்கு அதன் ஆய்வுப் பரப்புகளின் வளர்ச்சி எழுச்சி கொள்ளவில்லை' என்பார் பேராசிரியர். சபா. ஜெயராசா. இதனால், தானே இதற்கான ஆய்வு அறிவு நிலைப்பட்ட காரணங்களை வரலாற்று ரீதியிலும், புலமைத்துவ ரீதியிலும் முன்வைக்கும் நுண்ணாய்வுக் கூறுகளை சிந்தனை மரபுகளை ஆடலியல் முறைகளை நமக்கு அடையாளம் காட்டுகின்றார்.
குறிப்பாக இவர் தமிழ் நிலைப்பட்ட கலைப்பண்புகளை சமூக வரலாற்று அரசியல் பண்பாட்டு பின்புலங்களில் வைத்து ஆய்வு செய்வதற்கான தடங்களை அகலித்து ஆழமாக்கி வருகின்றார். இதனால், கருத்துநிலை மற்றும் அரசியல் சார்ந்த உரையாடல்களுக்கான புள்ளிகளை மிக நிதானமாகச் சுட்டுகின்றார். இதன் தருக்க வினைப்;பாடுதான் 'மொழிக் காலனித்துவம்' என்னும் கருத்தாக்கம். இந்தக் கருத்தாக்க வளர்ச்சி சமூகவியல், மானிடவியல், பண்பாட்டியல், உளவியல், அரசியல், கலையியல் போன்ற சமூக அறிவியல் துறைகளின் பன்முக ஊடாட்டம் சார்ந்து பரதநாட்டியத்தை ஆராய வேண்டிய தேவையை வலியுறுத்துகின்றது. இந்த நூல் இதற்கான சாத்தியப்பாடுகளை நமக்கு தெளிவாக உணர்த்துகின்றது.
பரத நாட்டியத்தின் விளக்கத்துக்கு நாட்டிய சாஸ்திரத்தை துணையாகக் கொள்ளும் மரபு சமஸ்கிருதக் கல்வியின் வளர்ச்சியோடு நிலைபேறு கொள்ளும் போக்கு படிப்படியாக வலுப்பெறத் தொடங்கின. குறிப்பாக, தமிழகத்தில் ஏற்பட்ட சமூக, பொருளாதார, அரசியல் பண்பாட்டு மாற்றங்கள் மற்றும் கல்வியியல் நிகழ்ச்சிகள் பரதநாட்டியத்தில் சமஸ்கிருதத்தின் செல்வாக்குக்கு வழிசமைத்தன.
ஐரோப்பியர் வருகைக்கு முற்பட்ட இந்தியப் பண்பாட்டில்
|